உள்நாடு

கல்பிட்டி தில்லையூர் பாடசாலையில் வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கல்பிட்டி தில்லையூர் முஸ்லிம் வித்தியாலய அபிவிருத்தி குழு மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அதிபர் S. M. அரூஸ் தலைமையில் World Vision Lanka நிறுவனத்தின் நிதியுதவியில் தரம் 09 வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (29) தில்லையூர் முஸ்லிம் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர் N. M. R. தீப்தி பர்ணாந்து , விஷேட அதிதியாக Development Facilitator World Vision Lanka A. I. B.ரத்வத்த பங்கேற்றிருக்க, அல் ஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் M. நவ்ப் , ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் அதிபர் திருமதி சகீலா , புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் ரியாஸ், புதுக்குடியிருப்பு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நாஜியா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்பிட்டி முகநூல் ஊடகவியலாளர் ரிஸ்வி ஹுஸைன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.


(ரிஸ்வி ஹுஸைன் – கல்பிட்டி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *