தனியான வேட்பாளரை நிறுத்த மொட்டு தீர்மானம்..!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த அக்கட்சியின் அரசியல் உயர்பீடம் முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் உயர்பீடிம் இன்று திங்கட்கிழமை மாலை கூடியது. இதன்போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.