உள்நாடு

கல்முனை அல் மிஸ்பாஹ்  மகா வித்தியாலய பெட்மின்டன் (Badminton) அணியினர் தேசிய மட்டத்துக்கு தெரிவு..!

கடந்த 25,26,27ம் திகதிகளில் திருகோணமலை மெக்கெய்ஸர் உள்ளக விளையாட்டரங்கில்  இடம்பெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெட்மின்டன் ( badminton) போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் பாடசாலையின் 16 வயது ஆண் மாணவ அணியினர் சிறப்பான முறையில் தமது திறமைகளை வெளிக்காட்டிய வண்ணம்  விளையாடி இறுதிப் போட்டியில் இரண்டாம்
இடத்தை பெற்று  தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வணியினர் கடந்த வருடம் (2023) நடைபெற்ற மாகாண பெட்மின்டன்  (badminton )போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் தமது பெயரை தடம் பதித்ததுடன் அல் மிஸ்பாஹ் பாடசாலை வரலாற்றில் மாகாண மட்ட  பெருவிளையாட்டில் முதன் முறையாக வெற்றி பெற்ற அணியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(எம்.எம்.ஜெஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *