46 வயது நபர் நீரில் மூழ்கி பலி..!
கலாவெவ நீர்த்தேக்க கோமரிகாகல விற்கு அருகாமையில் விருந்தோம்பல் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நீராடச் சென்ற 46 வயதுடைய திருமணமாகாத நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிசார் தெரிவித்தனர்.
வெலிகம மதுகம பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.கசுன் பண்டார என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ளவர் கல்நேவ பகுதியில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருபவர் என பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இன்னும் சிலருடன் கலாவெவ குளத்தில் விருந்தோம்பல் ஒன்றில் கலந்து கொண்டிருந்தாக பொலிசார் தெரிவித்தனர்.
விருந்தோம்பலின் பின்னர் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நபர் திடீரென நீரில் மூழ்கிய நிலையில் ஏனையோர் குளத்தில் இறங்கி அவரை மீட்டு கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)