உள்நாடு

முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எல்.எம்.சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (26) கல்முனையில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து கொள்வதற்கான மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுயிருந்தார்.

இதேவேளை இன்று(27)சனிக்கிழமை புத்தளம் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள புத்தளம் எழுச்சி மாநாட்டில் உத்தியோகபூர்வமாக கட்சியின் தலைவருடன் இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு தலைவரும் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளருமான அப்துல் றஷாக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னால் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான அன்சில், கட்சியின் வெளிநாட்டு விவகரங்களுக்கான பணிப்பாளர் மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(எம். எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *