உள்நாடு

அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மாகா வித்தியாலத்தில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுபறை திறந்து வைக்கும் நிகழ்வு

பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எம்.ஐ.ஏ. ஆர்.புஹாரியின் வேண்டுகோளுக்கிணங்க கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

கடந்த காலங்களில் அமைப்பாளர் புஹாரியின் சிபாரிசுக்கமைய ஒரு சில பாடசாலைகளுக்கு பஸ்வண்டிகள் வழங்கி வைத்ததுடன் எதிர் காலத்தில் இன்னும் பல பாடசாலைகளுக்கு பஸ் வண்டிகள் வழங்கவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் வுஹாரி மேலும் தெரிவித்தார் தெரிவித்துள்ளார்.

(எம். எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *