உள்நாடு

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பலி…!

மொரகொட பொலிஸ் பகுதிக்குட்பட்ட கணேவல்பொல தாச்சிஹல்மில்லேவ பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முரியகடவல பகுதியில் வசித்து வரும் 63 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். கணேவல்பொல பகுதியில் இருந்து கலென்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பாதசாரியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த  விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *