உள்நாடு

நான் எந்தத் தவறும் செய்யவில்லை – சபாநாயகர்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை சிபாரிசு செய்த விடயத்தில், அரசியலமைப்புப் பேரவை எந்தத் தவறையும் செய்யவில்லையென்றும், அந்தப் பேரவை சரியாகவே நடந்து கொண்டுள்ளது என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (26) காலை அறிவித்தார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோனின் சேவையை இடைநிறுத்த, உயர் நீதிமன்றம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கான வியாக்கியானத்தை எவரும் அறிய விரும்பினால், நீதிமன்றத்திற்குச் செல்வதே சிறந்ததெனவும், சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *