உள்நாடு

இலங்கையை சுற்றி நடைபவனியில் ஈடுபட்டுள்ள பேருவளை சஹ்மிக்கு பொத்துவில்  அறுகம்பையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்   சங்கம் வரவேற்பு..!

“சுதந்திரமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவோம் “எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்றை பேருவளையைச் சேர்ந்த எம்.எஸ்.எம். சஹ்மி கடந்த 13ம் திகதி பேருவளை நகரில் இருந்து தனது நடைபவனியை ஆரம்பித்தார்.
கடந்த 12 நாளாக காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனறாகல, சியம்பலாண்டுவ ஊடக பொத்துவிலை நோக்கி நடைபவனியில் வருகை தந்த சஹ்மியை வியாளக்கிழமை (25)காலை பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வைத்து அறுகம்பை முச்சக்கரவண்டி  உரிமையாளர்கள் சங்கத்தினர் வரவேற்று பொன்னாடை போற்றி வாழ்த்தி பாராட்டு தெரிவித்து வழியனுப்பினர்.
இந் நிகழ்வில் முச்சக்கர உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஏ.முசம்மில் மற்றும் அதன் உறுப்பினர்கள் அதனோடு இணைந்து
Accurate Systems Holding (Pvt) Ltd இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் முகம்மட் நெளசர் மற்றும் அறுகம்பை பிரதேசத்திற்கு சுற்றுலா வருகை தந்திருந்த வெளிநாட்டு  சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று வழியாக மட்டக்களப்பு ,திருக்கோணமலை,யாழ்ப்பாணம்  சென்று மன்னார் வழியாக அனுராதபுரம் , புத்தளம் ஊடாக கொழும்பு, பேருவளை செல்லவுள்ளதாக சுதந்திர நாடு வேண்டி  நடைபவனியில் ஈடுபட்டுள்ள சஹ்மி தெரிவித்தார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *