உள்நாடு

1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதி கைது…!

கறுவாத்தோட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கறுவாத்தோட்டம் – பௌத்தாலோக்க மாவத்தையில் பொலிஸ் கான்ஸ்டபிள் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த போது, முச்சக்கர வண்டியை நிறுத்தி போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் வழக்குப் பதிவு செய்ய முற்பட்டபோது, தண்டப்பணம் விதிக்க வேண்டாம் எனக் கூறி 1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்டபோதே குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி வலஸ்முல்லைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார். சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *