உள்நாடு

ரணில் சுயேட்சையாக போட்டி; கட்டுப் பணம் செலுத்தினார்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக களமிறங்கவுள்ளார். அதற்கான கட்டுப் பணமும் இன்று (26) காலை செலுத்தப்பட்டது.

ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (26) காலை அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை அறிவித்திருந்தது.

இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யமுடியும் எனவும், இன்று காலை முதல் ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *