உள்நாடு

சாதிக்கத் துடிக்கும் சாமானியன் சஹ்மியின் சாதனைப் பயணம் அக்கறைப்பற்றை சென்றடைந்தது…!

வரலாற்றில் முதற்தடவையாக , அசாத்திய முயற்சியை மேற்கொண்டு, நடைப்பவணியாக நாட்டை சுற்றும் சஹ்மி சஹீதின் சாதனைப் பயணம் திருக்கோயிலை சென்றடைந்தது.

நடந்தே நாட்டை சுற்றி வரும் நோக்குடன் கடந்த 13 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட இளம் யூடியூப்பர் சஹ்மி ஷஹீதின் சாதனை நடைபவணி கடந்த 26 ஆம் திகதி திருக்கோயிலை சென்றடைந்தது.

பேருவளையில் இருந்து காலி வீதி ஊடாக மாத்தறை, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று வரை சென்று அக்கரைப்பற்றை சென்றடைந்துள்ளது.

தன்னம்பிக்கையுடனும்,அசாத்தியத் துணிவுடனும் தன் சாதனை பயணத்தை தொடரும் இவருக்கு மாத்தறை பிக் சிட்டி குழு அங்கத்தவர்கள் மலர்க்கொத்து வழங்கி உற்சாகமளித்து வரவேற்றதோடு, ஹம்பாந்தோட்டை தனியார் வில்லா ஒன்றில், பேருவளையின் பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் அஹ்ஷர் தலைமையிலான குழு ஒன்றும் அமோக வரவேற்பளித்தனர்.

ஸஹ்மியின் தேவைகருதி பெறுமதியான கேமரா ஒன்றும் இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தன் பயணத்தை தொடர்ந்த இவர் யானைகள் அச்சுறுத்தல்கள் நிறைந்த காட்டு வழி பாதைகளில் கூட தைரியமாகவும் இறைநம்பிக்கையுடனும் தனியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

சஹ்மி, இச்சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்து வரலாற்று சாதனை செய்வதற்காக இவரது முழுச்செலவினையும் பிரபல தொழிலதிபரும் சிமி ஹோல்டிங் (பிரைவேட் லிமிடெட்) நிறுவன ஸ்தாபகருமான அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள் பொறுப்பேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தனது பயணத்தின் 14 ஆவது தினமாக கடந்த வெள்ளிக்கிழமை (26) அக்கரைப்பற்று வரை சென்றடைந்த இவருக்கு பொத்துவில் பிரண்ட்ஸ் நலன்புரி அமைப்பினால் மலர் மாலையனுவித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக இவரது வரலாற்றுச்சாதனை பயணம், மட்டக்களப்பு , திருகோணமலை, முல்லைத்தீவு , கிளிநொச்சி, யாழ்ப்பானம், மன்னார், அனுராதபுரம், புத்தளம் ஊடக கொழும்பு , களுத்துறை வந்து பேருவளையை சென்றடையவுள்ளது.

 
(பேருவளை :பீ.எம் முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *