உள்நாடு

சஜித்துடன் இணைந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பாராளுமன்ற விவகாரச் செயலாளராகக் கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே, மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விலகி, சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கொண்டார் .

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அவரை மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு நியமித்துள்ளார்.

குமாரசிறி ஹெட்டிகே, பல தசாப்தங்களாக அரசியல் விவகாரங்களில் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமாக இருந்து நம்பிக்கையாக செயலாற்றிய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *