உள்நாடு

இஸ்லாமிய வங்கி முறைமையை தெளிவூட்டல் மற்றும் ஓய்வுநிலை ஆளுமைகளை கௌரவிக்கும் விருது விழா..!

ஏறாவூர் அல் அஸ்ஹர் அஹதியா கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அமானா வங்கி ஏறாவூர் கிளை அனுசரனையுடன் இஸ்லாமிய வங்கி முறைமை குறித்த தெளிவூட்டலும் ஓய்வுநிலை பெற்றவர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு தாவூத் பவுன்டேசன் கட்டிடத்தில் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரியும் அஹதியா கல்வி நிறுவனத்தின் தலைவருமான ஐ.எல்.ஸைனுலாப்தீன் தலைமையில் 25/07/2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் எம்.எஸ்.பஷீர் கலந்து கொண்டதுடன் அமானா வங்கியின் ஏறாவூர் கிளை முகாமையாளர் ஏ.எல்.முஹம்மது அலி, ஏறாவூர் பொலிஸ் நிலைய உப பரிசோதகர் எஸ்.எல்.சரூக் மற்றும் அமானா வங்கியின் அறிவு மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் முஆத் முபாறக் மற்றும் ஓய்வுநிலை உத்தியோகத்தர்கள், அமானா வங்கி ஏறாவூர் கிளை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் . ஏறாவூர் நகர் ஓய்வூதிய சங்கத் தலைவர் கே.காலிதீன் தலைமையில் ஓய்வூதியர்கள் அதிகமானோர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டதுடன் சேவைமூர்ப்பு மற்றும் வயது அடிப்படையில் 2015 ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற 18 பேருக்கு “பொற்கிளி” மற்றும் பொன்னோலை வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

 

(உமர் அறபாத் -ஏறாவூர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *