உள்நாடு

அநுராதபுரம் புனித நகரில் பொலிஸார் மீது தாக்குதல்; மூவர் காயம்…!

சந்தேக நபர்களை கைது செய்வதற்கு சென்ற போது நபரொருவரின் தாக்குதலுக்கு உள்ளான அனுராதபுரம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும் தாக்குலை நடத்திய நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் குற்றத்தடுப்பு பிரிவில் கடமையுற்றும் உபபொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும் அனுராதபுரம் புனித பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு (24) இரவு சென்ற போது அனுராதபுரம் புனித நகரில் விஜயபா மாளிகைக்கு அருகில் போதையில் இருந்த குழுவினரில் ஒருவர் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அங்கு இடம்பெற்ற தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் சந்தேக நபரும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *