உள்நாடு

பொலிஸ் மா அதிபர் இடை நிறுத்தம்; ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பில்லை. – தேர்தல் ஆணையாளர்

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அது ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்தாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில வேளைகளில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நாளில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளதாகவும், இதன்போது அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *