உள்நாடு

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய மூன்று மாடி கட்டிட நிர்மாணப்பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் பெட்மிண்டன் பயிற்சி நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அம்பாரை மாவட்ட பொறியியலாளர் ஏ. எம். ஸாஹீர் உட்பட கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்களான யூ.எல். றியால், எம்.எம். முதர்ரிஸ், அஸ்மா மலிக் ஆசிரிய ஆலோசகர்கள், சாய்ந்தமருது கோட்டக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ பாபா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், ஆலோசகர் எம்.ஏ. கலீலுர்ரகுமான், பாடசாலை முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *