Friday, August 22, 2025
உள்நாடு

கல்முனை ரோயல் வித்தியாலய சுற்றுமதில் நிர்மாணப்பணிக்கு நிதி ஒதுக்கீடு

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்களின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் பயனாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை ரோயல் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுமதில் நிர்மாணப்பணி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை ரோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கலை நாட்டி வைத்தார்.


(எம்.எம்.றம்ஸீன்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *