உள்நாடு

கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அங்கத்துவ அடையாள அட்டை நிகழ்வு

திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (23) கிழக்கு மாகாண செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு திருகோணமலை மாவட்ட, கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் சங்கத்தில் புதிதாக இணைந்து கொண்ட உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.தானீஸ், எஸ். ஏ.எம்.அஸ்மி ஆகியோருக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் பணிப்பாளரும் (திட்டமிடல்) , கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருமான திரு.ஏ.எஸ்.எம்.பாயீஸ் அங்கத்துவ அடையாள அட்டைகளை வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்வில் கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் அமதுரு அமரஜீவ, இணைப்பாளர் ஓ.கியாஸ் சாபி, பொருளாளர் எஸ்.கீதபொன்கலன், உப செயலாளர் பாரூக் முபாரக், உறுப்பினர் என்.எச்.யூசுப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


(எஸ்.ஏ.எம்.அஸ்மி)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *