உலகம்

இரண்டு தினங்களுக்கு நிறுத்தப்பட்ட பங்களாதேஷ் போராட்டம்…!

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தை 48 மணி நேரத்துக்கு நிறுத்திவைப்பதாக போராட்டக் குழு தலைவா் நஹீத் இஸ்லாம் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த 48 மணி நேரத்துக்கு போராட்டத்தை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம். இதைப் பயன்படுத்தி ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறுவது, முடக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைத் திரும்பத் தருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.

1971-இல் பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக இந்த மாதத் தொடக்கத்திலிருந்து நடைபெற்றுவரும் மாணவா் போராட்டத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்துசெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *