உள்நாடு

இரண்டு இலட்சம் இலஞ்சம் பெற்ற காணி உத்தியோகத்தர் கைது…!

காணி உறுதிப் பத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கு  வியாபுரி ஒருவரிடமிருந்து 2 லட்சம்   இலஞ்சம் பெற்ற கெக்கிராவ பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை திவுலகடவல குசும்பொகுன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரையே கெக்கிராவ பிரதேச செயலக வளாகத்தினுள் கைது செய்துள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர் கெக்கிராவ பகுதி வியாபாரி ஒருவரிடம் காணி உறுதிப் பத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கு 5 லட்சம் இலஞ்சம் கேட்டுள்ளார். அதில் முதல் கட்டமாக 2 லட்சம் பணத்தை  இலஞ்சமாக பெற்றுக்கொள்ளும் போது  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கெக்கிராவ நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *