உள்நாடு

6 லட்சம் ரூபா பெறுமதியான சங்குகளுடன் கல்பிட்டியில் இருவர் கைது…!

கல்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் வைத்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 6 லட்சம் ரூபா பெறுமதியான சங்குகள் கல்பிட்டி பொலிஸ் விசேட பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சங்குகள் கல்பிட்டி வன்னிமுந்தல் பிரதேசத்தின் வாடியொன்றில் இருப்பதாக இருப்பதாக கல்பிட்டி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய கடந்த 21ஆம் திகதி மாலை 3 மணியளவில் குறித்த இடத்துக்குச் சென்ற கல்பிட்டி பொலிஸ் விசேட பிரிவினர் உரைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 6 லட்சம் ரூபாய்கள் பெறுமதியான சங்குகளை கைப்பற்றினர்.

அத்துடன் சந்தேகத்தின் பேரில் கல்பிட்டி மண்டலக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 45 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் மேலதீக விசாரனைகளை கல்பிட்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *