உள்நாடு

மஹாதிவுல்வெவ விபத்தில் மூவர் காயம்

ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் மஹாதிவுல்வெவ குளத்திற்கு அருகில் (22) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான் காத்து போனதால் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. இதன் போது அதிலிருந்த மூவர் காயமடைந்துள்ளதாவும் பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *