உள்நாடு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட யுக்திய போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 15 சந்தேக நபர்கள் கைது..!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய போதைப் பொருள் ஒழிப்புத் திட்ட சுற்றிவளைப்பின் போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரமேஸ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (23) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பெண்ணொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 நாவற்குடா,நொச்சிமுனை மற்றும் கல்லடி பிரதேசங்களில் சுமார் 40 லீற்றர் கசிப்புடன் 8 சந்தேக நபர்கள் கைது செய்ப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது சம்மந்தமாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *