உள்நாடு

தர்காநகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் புலமைப் பரீட்சை மாணவர்களுக்கு கெளரவம்

தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயம், முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, ஸாகிரா கல்லூரி ஆரம்ப பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளிலும் கடந்த 2023 வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்களும் சான்றிதழ்களும் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 27/07/2024 சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் ஏ.பீ.எம். ஸூஹைர் ஜே. பி. தலைமையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வைபவத்துக்கு பிரதம அதிதியாக அரசாங்க மருந்தக கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி ரூமி ஹாசிம் , கௌரவ அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லாம் ஹாஜியார், முன்னால் மேல் மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார் ஜெமீல், எம்.எம்.அம்ஜத், மற்றும் விசேட அதிதிகளாக கலிபதுஷ் ஷாதுலி மௌலவி மபாஸூல் ஹுஸைன், ஜெஸூக் அஹம்மத், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பதிஹாஜியார், நபீல் நஸீர், ஹஸீப் மரிக்கார், முஹம்மது காமில், முன்னாள் நகர சபை உறுப்பினர் ஷியாம் முனவ்வர் ஆகியோர்களும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலம் விரும்பிகள், பரோபகாரிகள் கலந்து சிறப்பிக்க உள்ளனர். மேற்படி வைபவத்துக்கு ஊர் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு சங்கத்தின் செயலாளர் இப்ராஹிம் இம்ரான் கேட்டுக்கொள்கின்றார்.

(பேருவலை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *