உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவித்தவுடன் பணிகள் ஆரம்பிக்கப்படும்..! -பிரதித் தபால் மா அதிபர் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என, பிரதித் தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, பிரதித் தபால் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
தபால் மூல வாக்களிப்பு மற்றும் விநியோக அட்டைகள் தொடர்பிலும், இதன்போது பிரதித் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க விளக்கமளித்தார்.
இதற்காக, 8 ஆயிரம் ஊழியர்க​ளைப் பயன்படுத்த தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அத்துடன், தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் அனுப்புவதற்கும் தபால் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *