உள்நாடு

24 மணி நேரத்துக்குள் அனுராதபுரத்தில் மூன்று விபத்துக்களில் மூவர் பலி..!

கடந்த 24 மணிநேரத்தில் அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 11 வயது சுறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துகள் (20) சனிக்கிழமை அனுராதபுரம் , மதவாச்சி மற்றும் கெக்கிராவ பொலிஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மதவாச்சி பொலிஸ் பகுதக்குட்பட்ட ஏ 09 வீதியில் முச்சக்கர வண்டியும் எரிபொருள் நிறப்பப்பட்ட பெளசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் வஹமல்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த 11 வயது சுறுமி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.விபத்திற்குள்ளான பெளசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அனுராதபுரம் ரம்பாவ பகுதியில் வீதியைக்கடந்த பாதசாரி மீது லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கெக்கிராவ கணேவல்பொல வீதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியோரத்தில் இருந்த கல்வெட்டில் மோதி விபத்திற்குள்ளானதில் காயமடைந்த சாரதி கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிசார் தெரிவித்தனர்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *