உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநரினால் கிழக்கு அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 2 கோடி நிதியொதுக்கீடு..!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக  வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் சமூக மட்ட அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், பள்ளிவாயல்கள், அரச நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்களை  கையளிக்கும் நிகழ்வு வடமேல் மாகாண ஆளுநரின் கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களின் ஏறாவூர் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளருமான அல்ஹாஜ் தஸ்லீம், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் முன்னாள் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.தையூப் ஆசிரியர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
1 கோடி 82 இலட்சம் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும்,
கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் 15 இலட்சமும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு 39 இலட்சமும் முதலாம் கட்ட நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு கட்டங்களாக நிதியொதுக்கீடுகள் இடம்பெறவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களின் கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் தெரிவித்தார்.
(எம்.எம்.ஜெஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *