உள்நாடு

திறப்பனை விபத்தில் இருவர் படுகாயம்..!

ஏ 09 வீதியில் திறப்பனை புஞ்ஞிகுளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரம் ஒன்றில் மோதி இன்று (22) விபத்திற்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில் வேனின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது .

படுகாயமடைந்த  இருவரூம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி  ஏ09 வீதி ஊடக சென்ற வேன் வேக கட்டுப்பாட்டை இழுந்து வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதியுள்ளது .அவ்வேளையில் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் திறப்பனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *