லைப் பொண்ட் சமூக சேவை அமைப்பின் இலவச கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!
லைப் பொண்ட் சமூக சேவை அமைப்பினால் நடத்திய திருமண வாழ்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கான, இரண்டு மாத கால இலவசக் கற்கை நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவனல்லை உயன்வத்தை மஸ்ஜிதுன் நூர் கேட்போர் கூடத்தில்,உயன்வத்தை யூ.வீ.மீடியா அங்கத்தவர்களின் ஒத்துழைப்போடு நடைபெற்றது.
அகில இலங்கை அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவரும்,லைப் பொண்ட் நிறுவனத்தின் பணிப்பாளருமாகிய எம்.ஆர்.எம்.ஸரூக் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் லக்சிறி நிறுவனத்தின் பணிப்பாளர் ஷஹீமுல்லாஹ் இக்பால் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
லைப் பொண்ட் நிறுவனத்தின் வளவாளர் அஷ்சேக் அக்ரம் அப்துஸ் ஸமத் இக் கற்கை நெறியை பூர்த்தி செய்து வெற்றிகரமாக சித்தியடைந்த மாணவிகள் குறித்து மதிப்பீட்டுரை நிகழ்த்தினார்.அதே வேளை லைப் பொண்ட் நிறுவனத்தின் இயக்குனர் அஷ்ஷெய்க் முஹம்மத் பகீஹுத்தீன் லைப் பொண்ட் நிறுவனம் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் உயன்வத்தை பள்ளி வாசல் பரிபாலன சபை தலைவர், செயலாளர்,பேஷ் இமாம்கள்,கல்வியாளர்கள் ,பாடசாலை பழைய மாணவியர் சங்கத்தின் உறுப்பினர்கள்,மற்றும் பிரமுகர்கள், பெற்றோர்கள் சித்தியடைந்த மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)