உள்நாடு

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் பற்றிய நினைவுப் பேருரையும் பரிசளிப்பு வைபவமும்..!

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் நினைவு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தினால் நடத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் “கறை படியாச் சேவைகள்” எனும் தலைப்பில் இடம்பெற்ற நினைவு தின கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் எதிர்வரும் (25) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் அனுசரணையில், சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக் கலந்து கொள்வார்.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூர் பற்றிய நினைவுப் பேருரையை முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஏ.அப்துல் கபூர் ஆற்றுவார்.
இதன்போது கட்டுரைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூரின் அவரது மறுமை ஈடேற்றத்திற்காக துஆப் பிரார்த்தனை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *