உள்நாடு

திருமணத்துக்கு முன்னரான கற்கை நெறி அங்குரார்ப்பணம்..!

இன்று 2024/07/21 ம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத் உலமா சபை கிண்ணியா கிளையும் COD நிறுவனமும் இணைந்து திருமணத்துக்கு முன்னரான பாடநெறி அங்குராப்பண நிகழ்வு நடை பெற்றது.

இதில் உலமாசபைத் தலைவர், பிரதேச செயலாளர், கிண்ணியா நகர் பிரதேச சபை எல்லைகளில் MOHகள் , 56 பள்ளி நிருவாகிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், மற்றும் COD நிறுவனத்தின் தலைவர் செயலாளர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இப்பாட நெறியின் நோக்கம் என்னவென்றால் இளவயது திருமணத்தை தடுப்பதும் திருமணத்தின் ஊடாக சமூக கட்டமைப்பை உறுதிப்படுத்துவதுமானதாக இருந்தது.

இந்த பாட நெறி எதிர்காலத்தில் சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்டுத்தும் என அனைவரும் நம்பிக்கையோடு இருந்தமையை அறிய முடிந்தது.

 

(பைபர் இஸ்மாயில்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *