உள்நாடு

மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய நிருவாக குழுவினர்..!

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) அக்கரைப்பற்று நீர்பூங்காவில்  அமைந்துள்ள ரீ.எப்.சீ. மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் உப தலைவர் குணாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய நிருவாக குழுவினர் தெரிவு  செய்யப்பட்டனர் மாவட்ட சாரண சங்கத்தின் தலைவராக கலாநிதி எஸ்.எல்.றியாஸ், செயலாளராக ஓய்வு நிலை ஆங்கில ஆசிரியர் எம்.எச்.ஏ.வஹாப், பொருளாளராக ஓய்வு பெற்ற அதிபர் வீ. ஜெயந்தன்,  தவிசாளராக ஓய்வுநிலை பிரதிக் கல்வி பணிப்பாளர் வீ.குணாளன் ஆகியோரும்  தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை ஊடக  இணைப்பாளராக உதவி மாவட்ட ஆணையாளர் எம். எப். றிபாஸும்  சங்கத்தின் போசகர்களாக ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஏ.வாஹீட், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, மருதூர் ஹசனும் தெரிவு செய்யப்பட்டதுடன்  ஆலோசர்களாக முன்னாள் வலயக்கல்விப்பனிப்பாளர் யூ. எல்.எம். ஹாசிம், கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ் ரவீந்திரன், ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் போன்றோர் சபையோரினால் முன்மொழியப்பட்டனர்.
(எம். எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *