உள்நாடு

களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விஷேச கருத்தரங்கு..!

அகால மரணம், மற்றும் ஆஸ்பத்திரிகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை எப்படி துரிதமாக பெற்றுக் கொள்வது மற்றும் வீடுகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்கள் சம்பந்தமாக கருத்தரங்கு ஒன்று களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று 20/ 07 /2024 சனிக்கிழமை காலை மக்கொனை அல் ஹஸனியா மகா வித்தியால கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா ஜனாஸா சேவைகள் சங்கத்தின் தேசிய தலைவர் தேசகீர்த்தி வைத்தியர் முஸ்னி தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்பு கடமையாற்றிய தற்பொழுது பேருவலை சீனன்கோட்டையில் தனியார் வைத்தியசாலையை நடாத்தி வரும் டாக்டர் பஷீர் முஸ்தபாவும் கலந்து சிறப்பித்தார்கள்.

 

(பேருவலை பீ எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *