உள்நாடு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பழைய மாணவிகளின் முன்மாதிரி: கற்பித்த ஆசிரியர்கள் கௌரவிப்பு..!

கற்பித்த ஆசிரியர்களைக்கௌரவிக்கும் முன்மாதிரிமிக்க நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் 2000ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளின் ஏற்பாட்டில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2000ம் ஆண்டு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திலிருந்து கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோன்றிய அனைத்து மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது தங்களுக்கு தரம் 1 தொடக்கம் 11 வரை கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் கெளரவிக்கப்பட்டதோடு, மாணவிகளின் கவிதை, பாடல், பேச்சு எனப்பல்வேறு பல்வேறு நிகழ்ச்சிகளும் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

இங்கே கருத்துத்தெரிவித்த ஆசிரியர்கள்,

இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகள் பல பாடசாலைகளில் ஆண் மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட போதும், முதல் தடவையாக பெண் மாணவிகள் இணைந்து இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

இதன் பின்னர் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்வதற்கு இது அத்திவாரமாக அமைய வேண்டுமெனக்கேட்டுக் கொண்டனர்.

இதன் போது 2000ம் ஆண்டு சாதாரண தர மாணவிகளினால் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு தொகைப்பணமும் பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்காக பிரதி அதிபர் ஏ.எல்.எம்.அஸ்கரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *