உள்நாடு

அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள அதிகரிப்பு..! அரசாங்கம் ஆலோசனை..!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ள 10.000 ரூபாய் அதிகரிப்பதுடன் இவ் 5,000 ஐயும் சேர்த்து அடுத்த மாத சம்பளத்துடன் 15.000 ரூபாவை பெற்றுக் கோடுப்பது குறித்தும் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக இச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச ஊழியர்களுக்கு அண்மையில் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுடன் சேர்த்து, ஒவ்வொரு ஊழியருக்கும் 15,000 ரூபா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.அரசு ஊழியர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்யவும், அடுத்த ஆண்டு முதல் சம்பளத்தை மாற்றியமைக்கவும் ஏற்கனவே குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இதற்காக செலவிடப்படும் பணத்தை ஏதோ ஒரு வகையில் மக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும், இல்லையேல் அடுத்த நான்கு மாதங்களுக்கு சிக்கல் ஏற்படும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இதன் கனத்தை அடுத்த அரசாங்கம் சுமக்க வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *