உள்நாடு

முல்லைத்தீவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உதித்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு..!

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக் கருவிற்கேற்ப   ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான புலைமைப் பரிசில் வழங்கும் நிகழ்வானது (18) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பங்கேற்புடன் இடம்பெற்ற குறித்த தேசிய ரீதியிலான நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 922 மாணவர்களுக்கான புலைமைப் பரிசில்கள்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *