உள்நாடு

இக்கிரிகொல்லாவ விபத்தில் நான்ஞ பேர் காயம்…!

அனுராதபுரம் இக்கிரிகொல்லாவ ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று (20) இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் ஏற்றிக்கொண்டு மதவாச்சி பகுதிக்கு சென்று கொண்டிருந்த பெளசர் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது எரிபொருள் ஏற்றிச்சென்ற பெளசர் வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த வயலிற்குள் கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்திற்குள்ளான பெளசரில் எரிந்த எரிபொருளை மற்றுமொரு பெளசருக்கு மாற்றப்பட்டுள்ளதாவும் காலத்திற்குள்ளானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்தனர்.

 

(எம்.ரீ.ஆரிப் -அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *