மூதூர் கங்கை பாலத்தின் அருகே பஸ் விபத்து – பலர் வைத்தியசாலையில் அனுமதி..!
இன்று (19) பிற்பகல் வேளை மூதூர் கங்கை பாலத்தின் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 52 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 59 பயணிகளில் 50க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டு மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எஸ்.ஏ.எம்.அஸ்மி )