உள்நாடு

சாய்ந்தமருது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது  அல்-ஜலால் வித்தியாலயத்தில் மரம் நடுகை நிகழ்வு..!

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பினால்  மர  நடுகை நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு  சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான உலகத்தை வழங்கவும் ஒரு முக்கியமான படியாக அமைந்தது.
இந்நிகழ்வில் அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன்  பிரதி அதிபர் ரீ.கே.எம்.சிராஜ் , ஆசிரியர் ஆலோசகரும், சாய்ந்தமருது கோட்டத்துக்கான சுற்றாடல் முன்னாடி கோட்ட ஆணையாளருமான எம்.எம்.சியாம் , ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் சாய்ந்தமருது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *