வட மத்திய அதிபர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவது முற்றாக தடை..!
வடமத்திய மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடைவிதித்து மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் மாணவர்களிடம் பணம் அறவிட்டு பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி வருவதாக மாகாண பிரதான அமைச்சு மாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி பணிப்பாளருக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களிடம் பணம் அறவிட்டு தனியார் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்களை பாடசாலை நேரத்திலோ பாடசாலை நேரம் முடிந்த பின்னரோ வார இறுதி நாட்களிலோ நடத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன இது தொடர்பிலான சுற்று நிருபத்தினை மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ‘கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சகல பாடசாலை அதிபர்களும் அனுப்பியுள்ளார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)