கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியில் சாதனையாளர்கள் கெளரவிப்பு..!
கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் 16 வயதிற்குட்பட்ட பெட்மின்டன் அணியினர் ஆகியோரை பாராட்டி, பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் காலை ஆராதனையின் போது நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)