Uncategorized

பேருவளையில் துவங்கிய சஹ்மி சஹீதின் சாதனைப்பயணம் ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தது…!

கடந்த 13 ஆம் திகதி, இலங்கையை கரையோரமாக நடைபவனியில் சுற்றிவரும் நோக்குடன் தன் பயணத்தை துவங்கிய பேருவளையைச் சேர்ந்த சஹ்மி சஹீத் 6 ஆவது நாளாக பயணம் செய்து நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையை சென்றடைந்துள்ளார்.

பேருவளை , பள்ளி வீதியில் தன் பயணத்தை துவங்கும் போது,பிரபல தொழிலதிபர் பிக் சிட்டி குழுமத்தின் ஸ்தாபகர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள் உட்பட பிரபல வர்த்தகர்கள் ஊர் மக்கள் என அனைவரும் உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.

இவர் நடைபவனியாக செல்லும் செல்லும் ஊரெங்கும் மக்கள் சிறந்த முறையில் வரவேற்று உற்சாகப் டுத்தி வருவதோடு கடந்த 16 ஆம் திகதி மாத்தறை கிளைபிக் சிட்டி குழும அங்கத்தவர்கள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தன் நடைப் பயணத்தை ஆரம்பித்த சஹ்மி அவர்களுக்கு வெலிகம,அம்பலாந்தொட்டை போன்ற பகுதிகளிலும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களால் மிகுந்த வரவேற்பு வழங்கப்பட்டதோடு, நேற்று 18 ஆம் திகதி ஹம்பாதோட்டையை சென்றடைந்தார்.

ஹம்பாந்தோட்டையைச் சென்றடைந்த அவரை ,பேருவளை பியூட்டி ஜெம்ஸ் அதிபதி அல்ஹாஜ் அஹ்ஸர் ஸவாஹிர் மற்றும் இரத்தினக்கல் வர்த்தகர் அல்ஹாஜ் சிராஸ் ஹனபி ஆகியோர் தலைமையிலான குழுவொன்று ஹாபர் விலாவில் வரவேற்றனர். பேருவளை சீனன்கோட்டை அல் ஹுமைசரா பாடசாலை அதிபர் எம். சீ இப்ராஹிம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் இதன் போது சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இவருக்கு பகல் போசன விருந்துபச்சாரம் அளிக்கப்பட்டதோடு தங்குமிட வசதியும் வழங்கப்பட்டது. இவரது இச்சாதனைப் பயண முயற்சியை பியூட்டி ஜெம்ஸ் அதிபதி பாராட்டி பேசியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரது பயணத்தின் அடுத்தகட்டம்,மட்டக்களப்பு நோக்கி நடைப்பயணம் செய்து, திருகோணமலை,யாழ்ப்பாணம்,மன்னார்,புத்தளம் ஊடாக நீர்கொழும்பு,கொழும்பு ,களுத்துறை என பயணித்து பேருவளை வந்தடையவுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை அம்சங்களை உலகறியச் செய்யும் நோக்குடன் , கடினமானதோர் சாதனைப்பயணத்தை மேற்கொள்ளும் ஷஹ்மி ஷஹீத், உங்கள் ஊரை வந்தடையும் போது உங்களது சிறந்த வரவேற்பைப் வழங்கி உற்சாகப்படுத்துங்கள்.


(பேருவளை : பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *