கொஹோவல மேம்பாலம் பிரதமரால் திறந்து வைப்பு…!
கொஹுவல மேம்பாலம் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று (17) திறந்து வைக்கப்பட்டது.
கொஹுவல நாற்சந்திப் பகுதியில் ஏற்படும் அதிக வாகன நெரிசலை குறைப்பதற்காக அங்கேரி நாட்டின் நிதியுதவியில் நெடுஞ்சாலைகள் அமைச்சும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இந்த மேம்பாலத்தை நிர்மாணித்துள்ளது.
பிரதமர் தினேஸ் குணவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, ஆகியோர் மேம்பாலத்தை திறந்து வைத்து பார்வையிட்டனர்.