உள்நாடு

ரஞ்சித் பண்டாரவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கெலிஓய, நிவ் எல்பிடிய கிராமத்தின் பிரதான பாதைக்கு காபட் இடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு..!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளமன்ற உறுப்பினரும் உடுநுவரைப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சிரேஸ்டப் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கெலிஓய, நிவ் எல்பிடிய கிராமத்தின் பிரதான பாதைக்கு காபட் இடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கெலிஓய, நிவ் எல்பிடிய தர்மவர்தனாராம பௌத்த விகாரையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கிராம மக்கள் பாராளமன்ற உறுப்பினரை விழா மண்டபத்துக்கு அழைத்து வருவதனையும் அங்குரார்ப்பண பாதாதை திறந்து வைக்கப்படுவதனையும் உடுநுவரைப் பிரதேசத்துக்குப் பாராளமன்ற உறுப்பினர் ஆற்றிய சேவைகளுக்காக நிவ் எல்பிடிய கிராமத்தின் சிரேஸ்டப் பிரஜைகளான டீ. கே. சில்பதாஸ மற்றும் ஜனாப் ஏ. எம். மௌஸூம் என்போர் கிராமத்தின் சிங்கள – முஸ்லிம் மக்கள் சார்பாக பாராளமன்ற உறுப்பினர் சிரேஸ்டப் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவிற்கு நினைவுச் சின்னம் வழங்கியதையும் அருகில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முவெடகம ஞாணாநந்த தேரர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மபாஸ் சனூன் ஆகியோர் இருப்பதனையும் கலந்து கொண்ட அதிதிகளின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *