Friday, August 22, 2025
உள்நாடு

உக்குவளை பிரதேசத்தில் சிறியளவிலான மண்சரிவு அபாயம்..!

தற்போது அவ்வப்போது பெய்துவரும் மழைகாரணமாக உக்குவளை பிரதேசத்தில் ஆங்காங்கு சிறியளவிலான மண்சரிவுகளுக்கான அபாயமிருப்பதாக அறியமுடிகிறது. எனவே மேட்டு மற்றும் மேட்டுநிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவுக்கான ஏதும் அடையாளங்கள் காணப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பதுடன் அவ்வாறான இடங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மழைகாரணமாக நீரேந்து பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து செல்வதால் அங்கு மக்கள் நீராடச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் நிலையம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *