உள்நாடு

அனுராதபுரத்தில் சிறிதளவான நில அதிர்வு..!

அனுராதபுரத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று இன்று மாலை உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 2.7 மெக்னிடியூப்டாக பதிவாகியுள்ளது.

அனுராதபுரத்திற்கு வடக்கே 41கிலோமீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொதுமக்கள் அச்சப்பபடத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *