உள்நாடு

35 இலட்சம் ரூபா செலவில் அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையில் அடிக்கல் நாட்டு விழா..!

அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 35 இலட்சம் ரூபா செலவில் அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கான விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா பதில் அதிபர் எஸ். எம். எஸ் சுலைஹா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்குறணை முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதில் தொழிலதிபர் டி. எம். எஸ். நவாஸ் , பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர் மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

(இக்பால் அலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *