உள்நாடு

புதையல் தோண்டிய நால்வர் கைது…!

ஹொரவப்பொத்தானை பொலிஸ் பகுதிக்குட்பட் மொரவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணியொன்றின் கிணற்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நால்வரை கெப்பித்திகொல்லாவ பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

மாத்தறை ஹக்மன பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் உட்பட ஹொரவப்பொத்தானை மற்றும் கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 28,29 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர் என   பொலிசார் தெரிவித்தனர்.

ஹொரவப்பொத்தானை மொரவெவ பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள கிணற்றினுள் புதையல் தோண்டுவதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனுராதபுரம் பிரதேசத்தில் பல்வேறு  இடங்களில் இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களையும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் ஹொரவப்பொத்தானை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் சந்தேக நபர்களை (17) கெப்பித்திகொல்லாவ நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *