உள்நாடு

தொழில் முனைவோருக்கான பயிற்சி வேலைத் திட்டம்

சமுர்த்தி சந்தைப்படுத்தல் அபிவிருத்தி வேலைத் திட்டம் 2024 இன் கீழ் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு திட்டத்தினை செயற்படுத்தும் நடவடிக்கைகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் 2024.07.15 ம் திகதி அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷேஹ் எஹியா றாசித் அவர்களின் பங்குபற்றலுடன் தலைமைப்பீட முகாமையாளர் அஷ்ஷேஹ் எம்.ஜே.எம்.நிஹ்மதுள்ளா அவர்களின் தலைமையில் திட்ட முகாமையாளர் என்.ரி.மசூர் அவர்களின் ஒருங்கிணைப்பு டன் திட்ட உதவியாளர் முஹாஜிர் அவர்களின் நெறிப்படுத்தலில் தொழில் முனைவோருக்கான RPL முறையின் கீழ் NVQ சான்றிதழ் வழங்கப்படுவது சம்பந்தமான பயிற்சி வேலைத் திட்டம் ஆலையடிவேம்பு , அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களின் தொழில் முனைவோர் களுக்காக நடைபெற்றது.

வளவாளர்களாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் இஸட்.அப்துர் றகுமான், நிந்தவூர் தொழில் பயிற்சி அதிகார சபையின் திட்ட உத்தியோகத்தர் எம்.எம். மஹ்சூன் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை நடாத்தினர்.நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.சீ.எம்.தஸ்லீம் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

(இஸட்.ஏ றஹ்மான் – ஒலுவில் செய்தியாளர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *